மேதின வாழ்த்துக்கள் வெறும் சம்பிரதாயமல்ல !
உழைப்பு சுரண்டலை எதிர்த்து ரத்திம் சிந்திய தியாகிகளுக்கு
தூக்கு மேடையேறிய தியாகப் போராளிகளுக்கு
வீர அஞ்சலி செலுத்தும் நாள் மட்டும் அல்ல !
உழைப்பே அனைத்து செல்வத்திற்கும் மூல காரணம்
உழைப்பாளிகள் தான் அனைத்தையும் உருவாக்குகின்றார்கள்
இதற்கு முரணாக முதலாளிகள் தான் செல்வத்தை உருவாக்குகின்றார்கள்
என்ற முதலாளித்துவ கோட்பாட்டை முறியடிக்க சபதம் ஏற்கும் நாள் !
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே !
இதற்கு மாறாக சாதி, இனம், மதம் , மொழியால்
தொழிலாளிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்தும்
சதிகாரர்களை விரட்டியடிக்க சபதம் ஏற்கும் நாள் !
தினம் தினம் போராடி போராடி பெற்ற அனைத்து சலுகைகளையும்
ஒவ்வொன்றாக பறிக்கின்ற கார்போரெட் அடிமை ஆட்சியாளர்களை
ஆட்சிக் கட்டிலிருந்து வெளியேற்ற சபதம் ஏற்கும் நாள் ! பெற்ற உரிமைகள் பாதுகாக்க வேண்டும் ! புதிய உரிமைகள் பெற வேண்டும் !
எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய உலகை ஆள வேண்டும்
என்று வீர சபதம் ஏற்கும் நாள் !
மேதினம் வாழ்க ! மேதின சபதங்கள் வேற்றி பெற சூளுரைப்போம் !
No comments:
Post a Comment