தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
தமிழ் மாநிலம்
நாள் :03.05.2021
தோழர்களே..
வழக்கு நிதி பற்றி விவாதிக்க சங்கத்தின் மாவட்ட செயலர்கள் கூட்டம் 02.05.2021 அன்று நடைபெற்றது..
கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது..
1) இதுவரை வழக்கு நிதியை வசூல் செய்து மாவட்ட சங்கங்களிடம் உள்ள தொகையை உடனே மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும்..
2) இம்மாதம் 5-ஆம் தேதிக்குள் வழக்கு நிதி வசூலை இறுதிப்படுத்த வேண்டும்..
3) இதுவரை சம்பள நிலுவை கிடைக்கப்பெறாத 543 ஒப்பந்த தொழிலாளர்கள், குறைவான சம்பளத்தொகை, விடுபட்ட காலத்திற்கான சம்பளத்தொகை, சட்டபூர்வ சலுகைகளான EPF, ESI, போனஸ் ஆகியவற்றை தீர்வு காண நமது சங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்..
கூட்ட முடிவுகளை கறாராக அமுல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்..
தோழமையுடன்,
மாநிலச் சங்கம்..
No comments:
Post a Comment