<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 21 April 2021

 தோழர் பொன்னையா செப்டம்பர் 19 தியாகிகள் தினத்தை பொட்டி பாடிய கடைசிப் பாடல். போய் வா என் இனிய நண்பனே இப்பாடல் இருக்கும் வரை எங்கள் இதயத்தில் நீ வீற்றிருப்பாய் கண்ணீருடன அஞ்சலி 

தொழிலாளியின் நலன் காக்கவே

உயிர் நீத்த தியாக செம்மல்களே !

உங்களுக் கெங்கள் அஞ்சலி !!

உரிமைக் கென்றே உதிரம் சிந்தி

உயிர் நீத்த தியாக செம்மல்களே !

இதயத்தில் மலரும் அஞ்சலி !!

சிக்காக் கோவின் வீதிகளில்

சிந்திய ரத்தத்திற் கஞ்சலி !

சிக்காக் கோவின் வீதிகளில்

சிந்திய ரத்தத்திற் கஞ்சலி !!

டெல்லியின் தெருவில் இந்திரபிஸ்தில்

இந்நுயிர் ஈந்தோருக் கஞ்சலி ! 

தொழிலாளியின் நலன் காக்கவே

உயிர் நீத்த தியாக செம்மல்களே !

உங்களுக் கெங்கள் அஞ்சலி !!

ஜாலியன் வாலாபாக்கி னிலே

சதியால் இறந்தோருக் கஞ்சலி !

ஜாலியன் வாலாபாக்கி னிலே

சதியால் இறந்தோருக் கஞ்சலி !

லாகூர் சிறையில் பாவிகளால்

மறைந்த மாவீரனுக் கஞ்சலி !

தொழிலாளியின் நலன் காக்கவே

உயிர் நீத்த தியாக செம்மல்களே !

உங்களுக் கெங்கள் அஞ்சலி !!

மதுரை மாநகரின் ரயிலடியில்

மாண்ட நம் தோழனுக் கஞ்சலி !

மதுரை மாநகரின் ரயிலடியில்

மாண்ட நம் தோழனுக் கஞ்சலி !!

மார்க்கியுடன் குட்டன் திருமேனி

மாவீரர் அனைவருக்கும் அஞ்சலி !

தொழிலாளியின் நலன் காக்கவே

உயிர் நீத்த தியாக செம்மல்களே !

உங்களுக் கெங்கள் அஞ்சலி !!

சிந்திய ரத்தம் வீண் போகுமோ ?

சீறிட்ட தியாகங்கள் வீண் போகுமோ ?

உழைப்பவர் ஒருபோதும் தோற்றதில்லை !

தோற்பதில்லை !! நாங்கள் தோற்பதில்லை !!!

-K. பொன்னையா 

No comments:

Post a Comment