<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 30 December 2015

திருச்சியில் அம்பேத்கர் பிறந்ததின விழா





நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா பேசினார்.


 
திருச்சிராப்பள்ளி,டிச.29-
                                              டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்ததின விழா பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று திருச்சி தொலைத் தொடர்பு பிஜிஎம் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.விழாவிற்கு மாவட்டத் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அஸ்லாம் பாட்ஷா வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் நந்தலாலா பேசுகையில், அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட அடிப்படை காரணம் சமூகத்தில் அழுதவர்களை நாட்டிற்கு அடையாளம் காட்டியவர் அம்பேத்கர். இந்திய சமூகம் மேல்நோக்கி போகாததற்கு சாதிய அமைப்புகளே காரணம். இந்தியாவின் மிகப்பெரிய கோயில் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்திற்குள் அனைவரையும் கூட்டிச்சென்றவர் அம்பேத்கர். சிதறிக்கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களை தலித் என்ற ஒற்றை குடையின் கீழ் கொண்டு வந்தவர் அம்பேத்கர் என்றார்.

நன்றி                        
திருச்சி பதிப்பு 30-12-2015 page  2