தோழர்களே வணக்கம்,
நமது திருச்சி மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த வாரம் CLC (தலைமை தொழிலார் ஆணையர்) அவர்களிடமிருந்து இவ்வருட போனஸ் ஆர்டர் பொற்று ஒப்படைத்து விட்டோம். இருந்தும்
நிர்வாக தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை,சரியான பதிலும். திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் நிலைபாட்டை கண்டித்து விரைவாக போனஸ் வழங்ககோரி நவம்பர் 4 அன்று மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும்.நமது சங்கதோழர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்.நவம்பர் 4 அன்று காலை 09.00 மணிக்கு PGM அலுவலகத்தில் நடைபெறும்.
கோரிக்கைகள்
1.குறைந்தபட்ச போனஸ் ரூ.3500/= வழங்கிடு !
2.பகுதி நேரம் என்று போனசை குறைக்காதே, ஒரு மாத போனஸ் வழங்கிடு !!
3.பகுதி போனஸ் முறையை மாற்று !!!
உரிமைகளை கேட்போம், தடைகளை தகர்த்து எறிவோம்.
ஒன்றுபடுவோம்!! போராட்டகளத்தில்!!!
மாவட்டச்செயலார்
K.பாண்டி